மணல் கடத்தியவர் கைது

விஜய மணிகண்டனை போலீசார் கைது செய்து டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-10-28 23:00 GMT
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜென்கின் தலைமையிலான போலீசார் பொய்யூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து போலீசார் சோதனை நடத்திய போது, கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில், டிராக்டர் டிரைவர் பொய்யூர் தெற்கு தெருவை சேர்ந்த விஜய மணிகண்டனை (வயது 33) போலீசார் கைது செய்தனர். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்