திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது

இன்று திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

Update: 2018-11-07 22:30 GMT
திருத்தணி,

திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் சிறப்பான முறையில் சண்முகர் சன்னதி அமைக்கப்பட்டு அங்கு சாமிக்கு லட்சார்சனை நடத்தப் படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த. விழாவையொட்டி கோவிலில் மூலவர் முருகபெருமானுக்கு இன்று மலர் அலங்காரம், நாளை(வெள்ளிக்கிழமை) பட்டு அலங்காரம், 10-ந்தேதி(சனிக்கிழமை) தங்க கவச அலங்காரம், 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவாபரண அலங்காரம், 12-ந்தேதி (திங்கட்கிழமை) வெள்ளிகவச அலங்காரம், 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. புஷ்பாஞ்சலி விழாவும் நடத்தப்படுகிறது. 14-ந்தேதி (புதன் கிழமை) சாமிக்கு திருக்கல்யாண திருவிழா நடத்தப்படுகிறது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்