பெண் சாமியாரிடம் ஆசி வாங்க வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு - போலீஸ் விசாரணை

திருவண்ணாமலையில் பெண் சாமியாரிடம் ஆசி வாங்க வந்த பக்தர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-07 21:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சிவானந்த சாதுக்கள் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரமத்தில் ராசாத்தி என்ற பெண் சாமியார் உள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த அறிவரசு (வயது 52) என்பவர் மாதந்தோறும் பவுர்ணமியன்று திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வது வழக்கம். அப்போது சிவானந்த சாதுக்கள் ஆசிரமத்தில் பெண் சாமியாரை சந்தித்து ஆசி பெற்று செல்வார்.

வழக்கம்போல் பெண் சாமியாரிடம் ஆசி வாங்க அறிவரசு கடந்த 5-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார்.

பெண் சாமியாரிடம் ஆசி பெற்று திரும்பிய போது ஆசிரமத்திற்குள்ளேயே அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது, அறிவரசு இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அறிவரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்