பீகாரில் முதியவர் கொலையை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-11-10 22:30 GMT
திருச்சி,

பீகார் மாநிலத்தில் சிதாமாரி மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தின்போது, ஜைனுல்அன்சாரி என்ற 80 வயது முதியவர் படுகொலை செய்யப் பட்டார். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்ட ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஷேக்அகமது தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் அல்தாபி கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது, இந்த கொலையில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ரபியுல்லா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்