மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பட்டு நெசவு தொழிலாளி சாவு

மாமண்டூர் தர்மாபுரம் குளங்கரை தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 35), பட்டுநெசவு தொழிலாளி மீது லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-11-11 22:00 GMT

தூசி,

தூசி அருகே உள்ள மாமண்டூர் தர்மாபுரம் குளங்கரை தெருவை சேர்ந்தவர் நந்தன் (வயது 35), பட்டுநெசவு தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். நந்தன் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில், அவரது அண்ணன் அண்ணாதுரைக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மாமண்டூருக்கு சென்று கொண்டிருந்தார். வந்தவாசி சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்றபோது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த லாரி இவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் நந்தன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தூசி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்