திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-13 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள பெரிய பனிச்சேரியை சேர்ந்தவர் பரத்முருகன்(வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

அப்போது திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணுடன் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடையும் அந்த பெண்ணுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்துள்ளார். இந்தநிலையில் தற்போது பரத்முருகன் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பரத்முருகனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, அவருடன் நெருக்கமாக இருந்ததும், இதனால் கர்ப்பமாகும் அந்த பெண்ணுக்கு பல முறை கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பரத் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்