பொன்னேரி ஆர்.டி.ஓ அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னகாவனம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமையான 7 கோவில்கள் உள்ளது.

Update: 2018-11-13 22:30 GMT
திருவள்ளூர்,

இந்த கிராமத்தின் வழியாக புதுவாயல்-பழவேற்காடு நெடுஞ்சாலை தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் 4 வழி சாலையாக மாற்ற அளவீடு பணிகள் முடிந்தது.

அளவீடு செய்யப்பட்ட நிலத்தை பொது நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்காக நெடுஞ்சாலை துறை நில உடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நேற்று பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் கார்த்திகேயன், நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் டெல்லிபாபு உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்