கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் தரமான மடிக்கணினி வழங்க கோரிக்கை

தரமான மடிக்கணினி வழங்கக்கோரி திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-13 22:45 GMT
திருவாரூர்,

வருவாய்த்துறை தொடர்பான சான்றுகளை கணினி மூலமாக வழங்குவதற்காக தமிழக அரசு கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி வழங்கி உள்ளது. இந்த மடிக் கணினிகள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் மக்களுக்கு சான்று வழங்குவதில் தாமதம் ஆகிறது.

எனவே தரமான மடிக் கணினிகளை வழங்கக்கோரி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். வட்ட தலைவர் ரமேஷ், வட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர் மார்ட்டின், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தரமான மடிக்கணினி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதல் பணிகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

மேலும் செய்திகள்