காசிமேட்டில் தாய் பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை சாவு பிறந்து 18 நாளில் சோகம்

காசிமேட்டில் தாய் பாலூட்டிய போது மூச்சுத்திணறி பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை இறந்தது.

Update: 2018-11-13 23:30 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவர்களுக்கு ஏற்கனவே 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த செலஸ்டினுக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செலஸ்டின் குழந்தைக்கு பாலூட்டினார். பின்னர் தூங்க வைத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், தாய் பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். குழந்தை பிறந்து 18 நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்