புதுச்சத்திரம் அருகே கூட்டுறவு வங்கி காவலாளி தற்கொலை

புதுச்சத்திரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இரவு காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-11-14 22:30 GMT
நாமக்கல், 
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நாட்டாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமசாமி, நேற்று காலையில் வங்கிக்கு வெளியே கட்டிலில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ராமசாமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமசாமியின் மகன் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இரவு காவலாளி ராமசாமி குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்