கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-05 22:45 GMT
கரூர்,

கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி ஆகிய தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு கரூர் தாலுகா அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கரூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். ஒரே உத்தரவில் மாவட்ட மாறுதல்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், 10-ந்தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் போராட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்