ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமி

ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதை ஆசாமி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-11 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. அங்கு, மனைவியை சேர்த்து வைக்கக்கோரி நேற்று இரவு ஒருவர் புகார் கொடுக்க வந்தார். அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்ததால் போலீசார் அவரிடம் இருந்து புகார் பெறவில்லை.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு சென்ற அவர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். அவரை பற்றி போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் தனது பெயரை கூட சொல்ல முடியாத அளவுக்கு புலம்பினார். இதைத்தொடர்ந்து அவர் மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், அவரை ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்