வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-16 21:45 GMT
பணகுடி, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பணகுடி பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறக்கப்பட்டது.

இந்த நிலையில் பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிராஜன் மற்றும் போலீசார் பணகுடி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக ஒரு வாலிபர் நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் வழிப்பறி வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அய்யப்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பணகுடி போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அய்யப்பன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்