திருவல்லிக்கேணியில் வீடு புகுந்து 37 பவுன் நகை-பணம் திருட்டு கணவன்-மனைவி கைது

வீடு புகுந்து 37 பவுன் நகை-பணம் திருடிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-19 22:11 GMT
சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முருகப்பா ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 45). மீன்பிடி தொழிலாளியான இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 37 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக சதீஷ்குமார் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சதீஷ்குமாரின் வீட்டிற்கு இன்சூரன்ஸ் முகவர்களாக பணியாற்றும் பிரதீப் (39) என்பவரும், அவரது மனைவி புவனேஷ்வரியும் (36) அடிக்கடி வந்து செல்வார்கள்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் இருவரும் சதீஷ்குமார் வீட்டிற்கு வந்தபோது, நைசாக நகை-பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன்பேரில் பிரதீப்பும், அவரது மனைவி புவனேஷ்வரியும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த அவர்களிடமிருந்து 37 பவுன் தங்க நகைகளும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்