கருங்கல் அருகே தீயில் கருகிய இளம்பெண் சாவு

கருங்கல் அருகே தீயில் கருகிய இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-23 22:30 GMT
கருங்கல், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கருங்கல் அருகே செல்லங்கோணம் புதுகாடுவெட்டிவிளையை சேர்ந்தவர் ஜோன்ஸ், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜின் ஜெனிஷா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு விஜின் ஜெனிஷா மண்எண்ணெய் விளக்கை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது விளக்கு சரிந்து விழுந்து ஆடையில் தீ பிடித்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் விரைந்து வந்து, விஜின் ஜெனிஷாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று விஜின் ஜெனிஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்