பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2019-01-11 21:45 GMT
திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல சுகாதாரத்துறை சார்பில், திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் மாநகர நல அலுவலர் (வடக்கு) ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. இது தொடர்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் மாணவர்கள் வழங்கினர்.

இதில் மண்டல நல அலுவலர் இளஞ்செழியன், செயற்பொறியாளர்கள் வேலுச்சாமி, ராஜசேகர், துப்புரவு அலுவலர் அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்