திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நின்றதை தட்டி கேட்டதால் தகராறு

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நின்றதை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினரும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

Update: 2019-01-21 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). நேற்று முன்தினம் பிரகாசின் வீட்டின் முன்பு புட்லூர் ஸ்ரீசாய் நகரை சேர்ந்த பூபாலன் மற்றும் அவரது நண்பரான கன்னிகாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரும் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட பிரகாஷ், இருவரையும் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த பூபாலன், கார்த்திக் ஆகிய 2 பேரும், பிரகாசை தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பிரகாசும் பூபாலன் மற்றும் அவரது நண்பரையும் தாக்கியதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்