போலீஸ்காரர் போல் நடித்து காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது

போலீஸ்காரர் போல் நடித்து காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-01-23 22:45 GMT
மும்பை, 

மும்பை கோராய் கடற்கரை மற்றும் மனோரி பகுதிக்கு தினசரி பல காதல் ஜோடிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் போலீஸ்காரர் என கூறிக்கொண்டு ஒருவர், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் கோராய் கடற்கரைக்கு வந்திருந்த ஒரு காதல் ஜோடியிடம் போலீஸ்காரர் என கூறிக்கொண்டு ஒருவர், உங்கள் காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் அந்த காதல் ஜோடி பயந்தனர். பணம் தந்தால் பெற்றோரிடம் கூறாமல் இருப்பதாக கூறினார். இதையடுத்து காதல் ஜோடி கையில் இருந்த பணத்தை கொடுத்தனர். அந்த பணத்தை வாங்கிக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து கிளம்பினார். இதனை கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் போலீஸ்காரர் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த மனோஜ் யோகி (வயது35) என்பது தெரியவந்தது.

அவர், போலீஸ்காரர் போல் நடித்து காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்