பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

திருச்சியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2019-02-08 21:45 GMT
திருச்சி, 

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி தென்னூர் நகரியம் செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று(சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை தில்லைநகர் அனைத்து பகுதிகளும், கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்புகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பைபாஸ்ரோடு, தேவர்காலனி, தென்னூர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன்கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரகுமானியபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரைரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர்நகர், நத்தர்ஷாபள்ளிவாசல், பழைய குட்ஷெட்ரோடு, மேலபுலிவார்டுரோடு, ஜலால்பக்கிரிதெரு, ஜலால்குதிரிதெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷாதெரு, பெரியகடைவீதி, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிலேதார்தெரு, சப் ஜெயில்ரோடு, பாரதிநகர், இதாயத்நகர், காயிதேமில்லத்சாலை, சின்னசெட்டித்தெரு, பெரியகம்மாளத்தெரு, சின்னகம்மாளத்தெரு, பெரியசெட்டிதெரு, மரக்கடை, பாஸ்போர்ட் ஆபிஸ் பகுதிகள் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் வரகனேரி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மகாலெட்சுமிநகர், தனரெத்தினம்நகர், வெல்டர்ஸ்நகர், தாரா நல்லூர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர்நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுக கார்டன், பி.எஸ்.நகர், லெட்சுமிபுரம், பைபாஸ்ரோடு, வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், கீழப்புதூர், படையாச்சிதெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், வள்ளுவர்நகர், அண்ணாநகர், மணல்வாரித்துறைரோடு, இளங்கோதெரு, காந்திதெரு, பாத்திமாதெரு, அன்புநகர், பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினர்தெரு, எடத்தெரு, முஸ்லிம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதிதெரு, பஜனை கூடத்தெரு ஆகிய இடங்களில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

கோர்ட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை வார்னர்ஸ்ரோடு, பாரதிதாசன்சாலை, லாசன்ஸ்ரோடு, ரெனால்ட்ஸ்ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், வாலாஜா பஜார், வயலூர்ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன்நகர், அரசுகாலனி, பீமநகர், ஹீபர்ரோடு, புத்தூர், பாரதிநகர், அரசு பொது மருத்துவமனை, பாலக்கரை, பருப்புக்காரத்தெரு, ஜமாலுதீன் மக்கான், உடையான்தோட்டம், அருணாச்சலம் காலனி, பீச்சாங்குளம், வேர்ஹவுஸ், புதுத்தெரு, கூனிபஜார், கண்டித்தெரு, மார்சிங்பேட்டை, புத்தூர் ஆபீசர்ஸ்காலனி, பிஷப்ஹீபர் கல்லூரி பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்