கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-02-11 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 72). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது எதிரே வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை போலீசார் அங்கு விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள மங்கைகோட்டை ஜெய்னூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(69). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசியநெடுஞ்சாலையில் அவதானப்பட்டி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்