ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் உடைப்பு

ஆஞ்சநேயர் சன்னதி முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

Update: 2019-02-13 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தெற்கு 4-ம் வீதி கடை வீதி சந்திப்பில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து நடைசாத்தப்பட்டது. நேற்று காலை கோவிலுக்கு வந்த பணியாளர்கள் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, ஆஞ்சநேயர் சன்னதி முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மூலஸ்தான சன்னதி கதவையும் உடைக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கோவில் பணியாளர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்