ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2019-02-13 22:15 GMT
ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் மலை பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது. மணக்கரையில் இருந்து வல்லநாடு வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில், 8 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி முதலிடமும், நாலந்துலாவைச் சேர்ந்த உதய முத்துபாண்டி மாட்டு வண்டி 2-வது இடமும், வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் பாண்டியன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தன.

சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் கயத்தாறைச் சேர்ந்த நாச்சியார் மாட்டு வண்டி முதலிடமும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி 2-வது இடமும், வடக்கு காரசேரியைச் சேர்ந்த ஓட்டக்காரன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது. குதிரை வண்டி பந்தயத்தில் மணக்கரையைச் சேர்ந்த வள்ளிநாயகம் குதிரை வண்டி முதலிடமும், அவினாப்பேரியைச் சேர்ந்த நிவேதா குட்டி குதிரை வண்டி 2-வது இடமும், கால்வாயைச் சேர்ந்த முத்து குதிரை வண்டி 3-வது இடமும் பிடித்து.

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.11 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்