புதுச்சத்திரம் அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

புதுச்சத்திரம் அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-14 21:15 GMT
பரங்கிப்பேட்டை,

புதுச்சத்திரம் அருகே உள்ள கொத்தட்டை நாகவள்ளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் பிருந்தா (வயது 18). இவர் பி.முட்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பிருந்தா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிருந்தாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிருந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிருந்தா உடல்நலக்கோளாறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்