காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 4 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-17 22:00 GMT
காஞ்சீபுரம்,

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது ஒரு லாரி மின்னல்வேகத்தில் வந்தது. உடனே இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சைகை காட்டினார். ஆனால் அந்த லாரி நிற்கவில்லை. உடனே இன்ஸ்பெக்டர் அந்த லாரியை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். பிறகு அந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில் அதில் சென்னைக்கு மணல் கடத்தி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில், லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த பள்ளம்பாக்கம் என்ற இடத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையொட்டி, அரக்கோணத்தை அடுத்த சித்தர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்கிற கோதண்டம்(27), அரக்கோணத்தை அடுத்த முருங்கை கிராமத்தை சேர்ந்த வேலு (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காஞ்சீபுரம் அருகே சீயன்மங்களம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் மணல் கடத்தியதாக கீழ் ஒட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்டீபன் (25) என்பவரை வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்