சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மல்லசமுத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2019-02-22 21:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மாமுண்டி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு, 6-ம் வகுப்பு மாணவியான 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். அந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளி சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சுப்பிரமணியை கோவை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்