நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு: சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-23 22:45 GMT
விருத்தாசலம், 

கருவேப்பிலங்குறிச்சி அருகே சாத்துக்கூடல் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அய்யனார் கோவில் அருகில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கமாக அமைக்கப்பட்ட இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தனிநபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20-ந் தேதி முதல் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று காலை கிராம மக்கள் அனைவரும் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.பின்னர் கிராம மக்களை சமாதானப்படுத்தி சப்- கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர். அப்போது கிராம மக்கள் சப்-கலெக்டர் பிரசாந்திடம், சாத்துக்கூடல் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்