7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-07 22:15 GMT

வேலூர்,

வேலூர் பகுதியை சேர்ந்த 2–ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (40) என்ற தொழிலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்