மெஞ்ஞானபுரம் அருகே டிரைவர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

மெஞ்ஞானபுரம் அருகே பட்டப்பகலில் டிரைவர் வீடுபுகுந்து 8 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-03-10 22:30 GMT
மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள அருளானந்தபுரம் வாலிவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டின் பவுல் (வயது 45). அறுவடை எந்திர வாகன டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா (40).

இவர்கள் நேற்று காலையில் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரத்தில் வைத்துவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்து சிறிது நேரத்தில் 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அவர்களது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை ஜஸ்டின்பவுல் துரத்தி சென்றார். ஆனால் அந்த மர்மநபர் வேகமாக ஓடி தப்பி சென்று விட்டார். பதற்றத்துடன் ஜஸ்டின்பவுலும், ஸ்டெல்லாவும் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஸ்டெல்லா மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்