நீடாமங்கலம் அருகே விபத்து: சைக்கிளில் சென்ற தபால் ஊழியர் சாவு கார் மோதியது

நீடாமங்கலம் அருகே கார் மோதி சைக்கிளில் சென்ற தபால் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-10 22:00 GMT
கொரடாச்சேரி,

மன்னார்குடி அருகே மூவாநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவர், நீடாமங்கலம் அருகில் உள்ள காளாஞ்சிமேடு தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி மாலை தனது சைக்கிளில் நீடாமங்கலத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். சீதாராமன் சாவடி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் திடீரென வெங்கடேசன் சென்ற சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர் கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வெங்கடேசனின் சகோதரர் பச்சையப்பன் கொடுத்த புகாரின்பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்