பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் நேற்று கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-13 22:00 GMT
தூத்துக்குடி,

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. மாணவ-மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்