செல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் அடிக்கடி பேசியதை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் குத்தாலத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-03-15 22:45 GMT
குத்தாலம், 

நாகை மாவட்டம் குத்தாலம் கீழக்காலனி தெருவை சேர்ந்த கனகராஜ் மகள் அரசிளங்குமரி(வயது 20). இவர், மணல்மேட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அரசிளங்குமரி, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் பேசி வந்து உள்ளார்.

இதனை பார்த்த அவரது பெற்றோர் அடிக்கடி செல்போனில் பேசுகிறாயே என்று கண்டித்து வந்தனர். சம்பவத்தன்றும் அரசிளங்குமரி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்ட அவரது பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அரசிளங்குமரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டின் எதிரே இருந்த ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அரசிளங்குமரி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்