திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-03-20 22:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமி நேற்று ஆய்வு செய்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:– திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1704 வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் வாக்குகள் திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் பொதுத்துறை மற்றும் போலீசார், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்