சுவாமிமலை அருகே கார் மோதி தொழிலாளி சாவு டிரைவருக்கு வலைவீச்சு

சுவாமிமலை அருகே கார் மோதி தொழிலாளி இறந்தார். இது தொடர்பாக கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-04-02 22:45 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள புளியஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுக்குகுரு. இவருடைய மகன் பாக்யராஜ்( வயது32).தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் ரோட்டில் பாக்யராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் பாக்யராஜ் மீது மோதி விட்டு அதே வேகத்தில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலுக்குள் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த பாக்யராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் பரிதாபமாக இறந்தார். சம்பவ இடத்தில் இருந்து கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்கள். கார் மோதி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் புளியஞ்சேரி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

மேலும் செய்திகள்