தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-09 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தேர்தல் துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிச்சைபிள்ளை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இளவரசன் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். தேர்தலின் போது பணிபுரியும் அலுவலர்களுக்கு செலவுக்கு தேவையான தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி, வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்