செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை

செல்போனில் விளையாடியதை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததால், மனமுடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-12 23:25 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் வசிப்பவர் சுந்தரவேல். இவருடைய மகன் ஜனகன் (வயது 18) இவர் காரைக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தாராம். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர்.

அதில் மனமுடைந்த மாணவர் ஜனகன் இரவு மாடியில் தூங்க சென்றார். பின்பு மறுநாள் காலை வெகுநேரமாகியும், அவர் கீழே இறங்கி வராததால், வீட்டில் இருந்தவர்கள் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கிருந்த அறையில் ஜனகன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்