கடலூர் முதுநகர் அருகே, என்ஜினீயரிங் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு
கடலூர் முதுநகர் அருகே தந்தை திட்டியதால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் சங்கவி(வயது 19). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கவி தனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவர் வீட்டில் வேலை செய்யாமல் டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை அய்யப்பன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கவி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கவி பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.