மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை
அரக்கோணத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் பகுதியை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மழை வர வேண்டி அரக்கோணம், எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தக்கோலம் கூட் ரோடு அருகே உள்ள எம்.என்.ஆர் நகரில் முடிந்தது.
பின்னர் அங்குள்ள மசூதி முன்பாக மழை வேண்டி கூட்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை சுமார் 2 மணி நேரம் நடந்தது.