பெருமாநல்லூர் அருகே காரில் பெண் பிணத்தை வைத்து விட்டு சென்ற கணவரை பிடிக்க போலீசார் தீவிரம்

பெருமாநல்லூர் அருகே காருக்குள் பெண் பிணத்தை வைத்து விட்டு குழந்தையுடன் பெங்களூரு சென்ற கணவரை பிடித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் இன்று (வியாழக்கிழமை) பெங்களூருக்கு செல்கிறார்கள்.

Update: 2019-05-01 22:53 GMT
பெருமாநல்லூர்,

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கவுரவ்அரோரா (வயது 40). தொழில் அதிபர். இவர் திருப்பூர் போயம்பாளையம் அய்யப்பன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி பிரஸ்ஜோத்கவுர் (29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந் தது. இவர்களுக்கு தேஜஸ் ஷாவ் என்ற 3 வயது மகன் உள்ளான். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியதில் பிரஸ்ஜோத்கவுர் தூக்குப்போட்டுக்கொண்டார். வெளியே சென்றுவிட்டு வந்த கவுரவ் அரோரா தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் பயந்து போன கவுரவ் அரோரா மனைவி பிரஸ்ஜோத்கவுர் உடலை தனது காரில் வைத்து கார் கவரால் அவரை மூடிவிட்டு, காரையும் பூட்டி தனது மகன் தேஜஸ்ஷாவுடன் பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காலை பெருமாநல்லூர் போலீசாருக்கும், தனது நண்பர் ரவீந்திரனுக்கும் இதுகுறித்து போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரஸ்ஜோத்கவுர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கவுரவ் அரோராவிடம் விசாரணை நடத்த பெருமாநல்லூர் தனிப்படை போலீசார் இன்று (வியாழக்கிழமை) பெங்களூரு செல்ல உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்