மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

மதுராந்தகம் அருகே தொழிலாளி இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-05-03 22:15 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மதுரா முதுகரையை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மகன் லட்சுமணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது தாய் கண்ணியம்மாள்.

இவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் லட்சுமணன் திடீரென இறந்துவிட்டார். இதனை பார்த்த அவரது தாய் கண்ணியம்மாள் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அவரை தேற்றினர்.

சிறிது நேரம் கழித்து கண்ணியம்மாள் தன்னுடைய மகன் இறந்த சோகம் தாங்காமல் வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்