திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

திருவாரூரில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2019-05-12 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,200 லாரிகள் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளி கிடங்குகளுக்கும், அரவை பணிகளுக்காக திருவாரூர் மாவட்ட அரிசி ஆலைகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரெயில் மூலமும் அனுப்பி வைக்கும் பணிகளில் ஏராளமான லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களுடைய அரவை பணிக்காக நெல் மூட்டைகளை தங்களுடைய சொந்த லாரிகளில் ஏற்றி கொள்வதாக கூறி பழைய நடைமுறையை மாற்றினர்.

போராட்டம் வாபஸ்


பழைய நடைமுறையை செயல்படுத்த வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து லாரிகளும் வழக்கம்போல் இயங்கும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினர்.

மேலும் செய்திகள்