ராஜபாளையம் அருகே வரதட்சணை கொடுமை; தொழிலாளி கைது

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-14 22:06 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரது மகள் செல்வி (வயது23). சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ஸ்டாலின்ராஜ் (29). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டாலின்ராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 10 பவுன் நகைகள், ரூ.50ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கணவர் தன்னை வெறுத்து ஒதுக்கி வருவதாகவும், கணவரும் குடும்பத்தாரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்