குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டனர்.

Update: 2019-05-15 22:30 GMT

வாணியம்பாடி,

திருப்பத்தூர் ஒன்றியம், மரிமாணிகுப்பம் ஊராட்சி ஓமகுப்பம் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையீடு செய்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திருப்பத்தூர் – ஆலங்காயம் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாரி மற்றும் குரிசிலாபட்டு, ஆலங்காயம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்