லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

வாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-17 23:30 GMT

வாலாஜா, 

வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில், அனந்தலை கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு மாற்றி தரக்கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் வணிக ஆய்வாளர் சரவணன் என்பவர் பாலாஜியிடம் ரூ.9 ஆயிரத்து 600 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் நேற்று பாலாஜி வணிக ஆய்வாளர் சரவணனிடம் லஞ்ச பணம் தரும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, விஜய் மற்றும் போலீசார் மின் வணிக ஆய்வாளர் சரவணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்