ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை: போலீஸ் தேடிய தொழிலாளி கைது

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை வழக்கில் போலீஸ் தேடிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-06-12 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் வடக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது40). விவசாயி. சம்பவத்தன்று இரவு இவர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்துக்கு சென்றார். இதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடினர். இந்தநிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயக்குமார் தோட்டத்தில் கடந்த 5 மாதங்களாக தங்கியிருந்து வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டம் ஆ.குரும்பலூர் பகுதியை சேர்ந்த நல்லு மகன் ராமன் (54) என்பவர் திடீரென தலைமறை வானது தெரியவந்தது.

இதனால் ராமர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் ராமரை தேடிவந்தனர். இந்நிலையில் ராமர் போலீஸ் பிடியில் சிக்கினார்.

அவரை போலீசார் திருவோணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தோட்ட உரிமையாளர் ஜெயக்குமார் தனக்கு கூலி வழங்காததால் ஆத்திரமடைந்த ராமர், ஜெயக்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு

அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராமனை கைது செய்து ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்