காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்த 2 நாட்களில் கல்லூரி பேராசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-06-17 23:00 GMT

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 26). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

இவர் அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான திலகா (20) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 13–ந் தேதி இவர்களது திருமணம் திருப்பதி கோவிலில் நடந்தது.

இந்நிலையில் திருமணமான 2–வது நாளில் கடந்த 15–ந்தேதி சனிக்கிழமையன்று சந்திரகுமார் ஊரில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அங்கு இருந்த பூச்சி கொல்லி மருந்து (வி‌ஷம்) திடீரென்று எடுத்து குடித்து விட்டார். பின்னர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்