போலீஸ் அதிகாரி அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை

முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை நாமக்கல் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-20 22:45 GMT
முசிறி,

நாமக்கல் பகுதியை சேர்ந்த மூத்த வக்கீல் ராவணன் வழக்கு விசாரணை தொடர்பாக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் லதா, அவரை மரியாதை குறைவாக பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை நாமக்கல் வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் முற்றுகையிட்டனர். பின்னர் துணை சூப்பிரண்டு தமிழ்மாறனிடம் தொட்டியம் சப்-இன்ஸ்பெக்டர் லதா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்