நவசேவா துறைமுகத்தில் ரூ.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

நவசேவா துறைமுகத்தில் ரூ.6 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-07-05 23:33 GMT
மும்பை, 

நவிமும்பை நவசேவா துறைமுகத்துக்கு வெளிநாட்டில் இருந்து அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஈராக்கில் இருந்து வந்த பேரிச்சம்பழம் பெட்டிகள் இருந்த கன்டெய்னரில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பேரிச்சம்பழம் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளுக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதிகாரிகள் பெட்டிகளில் இருந்து ரூ.6 கோடி மதிப்பிலான 19 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நூதன முறையில் தங்க கடத்தலில் ஈடுபட்டவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்