கார் மோதி 4 பேர் படுகாயம் டிரைவர் கைது

கார் மோதி 4 பேர் படுகாயம் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-15 22:45 GMT
ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சண்டன் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது 41). இவரது மனைவி வசந்தி(35), மகன் சஞ்சய்(13) மற்றும் உறவினர் விழுப்புரம் மாவட்டம், கொங்கராம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகள் திவ்யா(12). இவர்கள் 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் சென்றுவிட்டு சண்டன் கிராமம் நோக்கி பிச்சனூர் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சக்திவேலை(69) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்