பரங்கிப்பேட்டை அருகே, சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளி கைது

பரங்கிப்பேட்டை அருகே சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2019-07-15 22:30 GMT
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 28). தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை கடந்த 6-ந்தேதி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தந்தை பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிங்காரவேலு திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா (பொறுப்பு) மற்றும் போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த சிங்காரவேலை மடக்கி பிடித்தனர்.

மேலும் அவர் கடத்தி சென்று திருமணம் செய்த சிறுமியை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரரையும் பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சிங்காரவேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்