ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-20 22:15 GMT
ஸ்ரீரங்கம்,

மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஸ்ரீரங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்க ஸ்ரீரங்கம் பகுதி தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் அன்புசெல்வம், மாவட்ட நிர்வாகி அழகப்பன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வீரமுத்து ஆகியோர் பேசினர். முடிவில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்